ஜம்மூ காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளப்பட்டனர்!

30 June 2020 அரசியல்
indianarmy1.jpg

ஜம்மூ காஷ்மீரில் இன்று இராணுவத்தினர் நடத்தியத் தீவிர தேடுதல் வேட்டையில், பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, அனைத்து நாடுகளும் சுகாதாரப் பணிகளில் மூழ்கி உள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் மட்டும் தொடர்ந்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பிய வண்ணம் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், பல்வேறு தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இன்று காலையில் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் வாகாமா பிஹ்பெரஹா என்றப் பகுதியில், தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில், அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீசார் சுட்டுத் தள்ளினர். இதுகுறித்துப் பேசியுள்ள ஜம்மூ காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், இந்த இரண்டு தீவிரவாதிகளும் 2 சிஆர்பிஎப் வீரர்களையும், ஒரு சிறுவனையும் சுட்டுக் கொன்றவர்கள் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS