ஏப்ரல் 15ம் தேதிக்கான முன்பதிவு தொடக்கம்! அப்பாடா!

03 April 2020 அரசியல்
indianrailways.jpg

வருகின்ற ஏப்ரல் 15ம் தேதிக்கான ரயில் மற்றும் விமான சேவைக்கான, டிக்கெட் புக்கிங்கானது தொடங்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், வெளிநாட்டு விமான சேவைகள், உள்நாட்டு விமான சேவைகள், இந்திய ரயில் சேவை மற்றும் வெளியூர் பேருந்து வசதி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன.

இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்தனர். தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்வதுக் கூட அவர்களால் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 14ம் தேதி மாலையுடன், இந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல், ரயில் சேவையும், விமான சேவையும் இயக்கப்பட உள்ளன.

இருப்பினும், வெளிநாடு செல்வதற்கான விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கப்பட வில்லை. இதனால், வெளிநாடு செல்வதற்கான விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படாதது போல் தெரிகின்றது.

HOT NEWS