மகேந்திர சிங் தோனி வருகின்ற 2022ம் ஆண்டு வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகித் தெரிவித்துள்ளார்.
தோனி எப்பொழுது ஓய்வு பெறுவார் எனப் பலரும் பேசி வருகின்றனர். இது குறித்துப் பேசிய சிஎஸ்கே அணியின் முதன்மை நிர்வாகி காசி விஸ்வநாதன், தோனிக்கு தனது பொறுப்பு என்ன? தன்னையும் தன்னுடைய அணியினையும் எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுத் தெளிவாகத் தெரியும். வருகின்ற செப்டம்பர் 19ம் அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன.
இதற்காக பயிற்சி பெறுவதற்காக, தோனியும் மற்ற வீரர்களும் சென்னை வருகின்றனர். இவர்கள் பற்றிப் பேசுகையில், இந்த ஆண்டு மட்டுமின்றி, அடுத்த ஆண்டும் அவர் சென்னை அணியில் இடம்பிடிப்பார் என நம்புகின்றோம். அனேகமாக 2022ம் ஆண்டு வரை அவர் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர் தொடர்ந்து, தன்னுடைய சொந்த ஊரில், தீவிரமாகப் பயிற்சிப் பெற்று வருகின்றார்.
தோனிக்கு எவ்வாறு அணியினைப் பார்த்துக் கொள்ள இயலும் என்பது, நன்குத் தெரியும். அவர் தலைமையில் நம்முடைய அணியானது, ப்ளே ஆப் வரை, பல முறை சென்றுள்ளது என்றுக் கூறியுள்ளார்.