திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் மரணம்! தலைவர்கள் இறங்கல்!

10 June 2020 அரசியல்
janbazhagan.jpg

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் மரணமடைந்தார். அதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின், திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் ஜெ அன்பழகன். திமுக தலைவர்களுள் முக்கியமான ஒருவராக இருந்தவர். இந்நிலையில், 1958ம் ஆண்டு பிறந்த இவர், மூன்று முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுமக்களுக்காக உழைத்து வந்தார். அதிமுகவினரின் மரியாதைக்குரியவராகவும் இவர் இருந்து வந்தார்.

அவர் திடீரென்று கடந்த வாரம், உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரொனோ வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதலில் வேகமாக உடல்நலம் தேறிய அவர், பின்னர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு, மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.

இந்நிலையில், இன்று காலை 8.05 மணியளவில் அவர் மரணமடைந்தார். இன்று அவருக்கு 62வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் அன்றே, இவருக்கு மரணமும் ஏற்பட்டு உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இவருடைய உடலைக் காண, திமுகவினர் உட்படப் பலரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

HOT NEWS