விஜயுடன் பேசுவது கிடையாது! நடிகர் நெப்போலியன் அதிரடி பேட்டி!

02 July 2020 சினிமா
actornepolian.jpg

தொடை தெரிய வேட்டிக் கட்டிக் கொண்டு, நடனம் ஆடுவது, பேசுவது, சண்டையிடுவது என்பது நடிகர் நெப்போலியனின் அடையாளங்களுள் ஒன்று. அவர் தற்பொழுது அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

அவருடைய மகனுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக, தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற அவர், அங்கேயே செட்டிலாகிவிட்டார். நடிகர், தொழிலதிபர் எனப் பண்முகத் திறமை கொண்டவர் நெப்போலியன். அவர் தற்பொழுது ஹாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் நடித்த டெவில்ஸ் நைட் திரைப்படமானது, தற்பொழுது ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக ஜூம் ஆப்பின் மூலம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், நடிகர் விஜயுடன் நடித்தது பற்றிக் கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்குப் பதிலளித்த அவர், தற்பொழுது விஜய் எப்படி இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது.

போக்கிரி படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அப்பொழுது, எனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பொழுது முதல் நான் விஜயுடன் பேசுவது கிடையாது. அந்தப் படத்தில், பிரபுதேவாவிற்காகத் தான் நடித்தேன். அந்தப் படம் நன்றாக வந்திருந்தது படமும் ஹிட்டானது. நன்றாக வசூலும் செய்தது.

விஜய் அந்தப் படத்தில், மகேஷ் பாபு கதாப்பாத்திரத்தில் தான் நடித்தார். கடினமாக உழைக்கின்றார். அதனால் தான் நன்றாக வளர்ந்து வருகின்றார் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS