மேலும் ஒரு சோகம்! 3 புலம் பெயரும் தொழிலாளிகள் பலி! 5 பேர் படுகாயம்!

11 May 2020 அரசியல்
trailervehicle.jpg

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் பகுதியில் இருந்து, உத்திரப் பிரதேசத்தின் முஸாபர்நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த புலம் பெயரும் தொழிலாளர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து, 1400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாம்ஷெட்பூருக்கு, ஏழு பேருடன் வாகன ட்ரெய்லர் ஒன்று என்எச் 33 வழியாக சென்று கொண்டு இருந்தது அப்பொழுது, அதற்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதல் இருப்பதற்காக, அந்த ட்ரெய்லரின் ஓட்டுநர், வாகனத்தினைத் திருப்பி உள்ளார். ஆனால், அந்த ட்ரெய்லரானது, எதிர்பாராத விதமாக அருகில் சென்று கொண்டிருந்த டிரக்கின் மீது மோதியது.

இந்த விபத்தில், அந்த ட்ரெய்லரில் அமர்ந்திருந்த ஏழு பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில், மூன்று பேர் துரதிர்ஷ்டவசமாக பலியாகினர். இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகி உள்ளதாக, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற எஸ்பி பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கிட்டத்தட்ட மே-17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள், மாபெரும் துயரத்தினை உருவாக்கி வருகின்றன. அவுரங்காபாத்தில் 16 புலம்பெயரும் ஊழியர்கள், ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS