பஞ்சாப் மாநிலத்தில், விஷ சாராயம் குடித்த 104 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பொதுமக்களில் பலர் தாமாக சாராயம் காய்ச்சிக் குடித்துள்ளனர். மேலும், பலருக்கு விற்பனையும் செய்துள்ளனர். இதனால், பலருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போனது.
இதில் தற்பொழுது வரை, பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களில் 104 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து பதிலளித்துள்ள பஞ்சாப் அரசு, இதுவரை எத்தனைப் பேர் பலியாகி உள்ளனர் என சரியாகத் தெரியவில்லை என கூறியுள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ளப் பலரும் தற்பொழுது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து உள்ளது.