இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்கள், எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தின் காரணமாக, உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகரில், இராணுவப் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு இராணுவ வீரர்கள் பாலம் அமைக்கும் பயிற்சியினை இன்று செய்து பார்த்துள்ளனர். அதில், எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது பற்றி விசாரணை நடத்தப்படும் என, பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர்.