இன்று புலிகள் நாளை ஒட்டி, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், புலிகளின் எண்ணிக்கையைப் பற்றியத் தகவலை வெளியிட்டார்.
இது குறித்துப் பேசிய திரு நரேந்திர மோடி, புலிகளை காப்பதற்கு நாம் கடமைப்படு இருக்கின்றோம். அரசின் முயற்சிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் முயற்சியால், புலிகளின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளதாக கூறினார்.
தற்பொழுது சென்ற ஆண்டைக் காட்டிலும், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு 2,226 புலிகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து, புலிகளின் வளர்ச்சியில், வன விலங்கு அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2967 புலிகள் உள்ளதாக மோடி தெரிவித்தார்.