டிசம்பர் வரை தல தோனி லீவ்! டிசம்பரில் "மீண்டு"ம் வருகிறார்!

22 September 2019 விளையாட்டு
dhoniform.jpg

தற்பொழுது விருப்ப ஓய்வில் இருக்கும் மகேந்திர சிங் தோனி, தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்று வரும் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால், தோனியின் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், அடுத்த நடைபெற உள்ள போட்டிகளிலும், அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை மிரர் என்றப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், தல தோனி, உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி முடிந்த பின், மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான, இந்தியாவின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, இந்திய இராணுவத்திற்கு சென்று சேவை செய்தார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா தொடரிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அடுத்து நடைபெற உள்ள அசாரே டிராபி தொடரிலும் அவர் விளையாடப் போவதில்லை. மற்றும், இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வர உள்ள, வங்கதேசத்துடனான, டி20 தொடரிலும் தோனி விளையாடப் போவதில்லை. இந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில், தோனி பங்கேற்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS