தன்னுடைய மருமகனுடன் தான் கள்ளத் தொடர்பில் இல்லை என, பிரபல நடிகை கண்ணீருடன் வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
மலையாள உலகின் பிரபல நடிகையும், நடனக் கலைஞருமானவர் தாரா கல்யாண். இவருடைய மகள் சௌபாக்கியாவிற்கும், அர்ஜூன் என்ற நபருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து, தன்னுடைய கணவர் இறந்துவிட்டதால், தாரா கல்யாணும், அவருடைய மருமகனும் கள்ளத் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இவைகளைப் பொறுத்து வந்த தாரா கல்யாண், தற்பொழுது வேறு வழியின்றி வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், என் வயது என்ன, அவருடைய வயது என்ன? நான் எப்படி அவருடன் அப்படி இருப்பேன்? சமூக வலைதளங்களில் இப்படி என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது வருத்தமாக இருக்கின்றது. கடவுள் சத்தியமாக நான் அப்படி இல்லை எனக் கூறியுள்ளார்.