அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்டும், அறக்கட்டளையின் தலைவராக தமிழகத்தினைச் சேர்ந்த, முன்னாள் வழக்கறிஞர் பராசரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு, அயோத்தி வழக்கில் இராமர் கோயில் கட்டுவதற்கு தடை இல்லை என்ற தீர்ப்பினை, உச்சநீதிமன்றம் வழங்கியது. அத்துடன், அக்கோயிலினை கட்டுவதற்கு நான்கு மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை, மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும், வலியுறுத்தியது.
மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்பொழுது அறக்கட்டளையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன் தலைவராக, தமிழகத்தினைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் பராசரன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனை பற்றிப் பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், விரைவில் அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும் என்றுக் கூறியுள்ளார்.