நடைபெற உள்ள ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புத் தேர்வுகளில், அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவர் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நேற்று, சேலையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு பற்றி, மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அனைவருமே, கண்டிப்பாக வெற்றிப் பெறுவர். இதற்கான, அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
மேலும், பொதுத்தேர்வு எழுதுவதற்காக, யாரும் மற்றப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம். அவர்கள், தங்களுடையப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் பள்ளிகளின் தரத்தினைப் பற்றி அறியவே, இந்தத் தேர்வு நடத்தப்படுகின்றது. மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம். தேர்வு குறித்து தேவையற்றக் கருத்துக்களையும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.