எல்லாரையும் ஏற்றுக் கொண்டு, வரவேற்கும் ஒரு நாட்டினைக் காட்டுங்கள் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், சர்வதேச மனித உரிமைகள் ஆணையமானது, காஷ்மீர் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது. எங்களை விமர்சிக்கும் முன், பழைய வரலாறுகளை எடுத்துப் பார்க்க வேண்டும். நாங்கள் மாநிலங்களற்ற நபர்களின் எண்ணிக்கையை குறைக்கவே, தற்பொழுது முயற்சிக்கின்றோம். சிஏஏ குறித்துப் பேசிய அவர், நாங்கள் எங்களால் முடிந்த வரையில், பொதுமக்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் வராத வகையிலேயே உழைத்து வருகின்றோம்.
பொதுவாக, அனைவருமே இந்த சிஏஏவினை விமர்ச்சிக்கவில்லை. அனைவரையும் ஏற்றுக் கொண்டு வரவேற்கும் ஏதாவது ஒரு நாட்டினைக் காட்டுங்கள் பார்ப்போம். யாரும் அவ்வாறு செய்வது கிடையாது என்றுக் கூறியுள்ளார்.