நவம்பர் 29ம் தேதி டெல்லி வருகின்றார் கோத்தபய ராஜபக்ஷே!

20 November 2019 அரசியல்
gotabayarajapaksa.jpg

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று, வரும் நவம்பர் 29ம் தேதி அன்று, டெல்லி வருகின்றார், இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்பய ராஜபக்ஷே.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இது குறித்து அறிவித்துள்ளார். அதில், இலங்கை அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்பய ராஜபக்ஷேவின் முதல் நாள் பணியின் பொழுது, இந்தியப் பிரதமரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பாரதப் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், இரு நாடுகளுக்கிடையிலும், அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவை நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் டெல்லி வருவது, இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவினை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இலங்கை அதிபரை முதன் முதலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்தியவர் பிரதமர் மோடி என, இலங்கை செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

HOT NEWS