குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! நடுத்தெருவில் தூக்குத் தண்டனை வழங்கப்படும்! எங்கு தெரியுமா?

08 February 2020 அரசியல்
child.jpg

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு, நடுத் தெருவில் வைத்து தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், தற்பொழுது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், குழந்தைகளுக்கான பாலியல் தொல்லையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து, அனைத்துக் கட்சியினரும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, நடுத்தெருவில் வைத்து, தூக்குத் தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானத்திற்கு, அனைவரும் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து, இந்த தீர்மானம் நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு, பெரும்பாலானோர்களின் ஆதரவு கிடைத்ததால், இந்த சட்டம் நிறைவேறியதாக, பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

HOT NEWS