பாகிஸ்தானுக்கு ஐநா உதவ முடியாது என்றதால், தற்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான்.
காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவிற்கு உலக நாடுகள் பலவும், தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வந்தன. பல நாடுகள், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல், மறைமுக தெரிவித்தன. ஒரு சில நாடுகள் அமைதியாக இருந்து, நடப்பதை வேடிக்கைப் பார்த்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே நேரடியான ஆதரவினை அளித்தது.
காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவிற்கு உலக நாடுகள் பலவும், தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வந்தன. பல நாடுகள், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல், மறைமுக தெரிவித்தன. ஒரு சில நாடுகள் அமைதியாக இருந்து, நடப்பதை வேடிக்கைப் பார்த்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே நேரடியான ஆதரவினை அளித்தது.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தை, ஐநா சபைக்கு கொண்டு சென்றது பாகிஸ்தான். இருப்பினும், பாகிஸ்தானின் கோரிக்கையை மற்ற நாடுகள் ஆதரிக்காததால், ஐநா சபை அந்த கோரிக்கையை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் மோடியின் செல்வாக்கு மேலும் உயரும் என, விமர்சகர்கள் கருதுகின்றனர்.