ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓவைசி, நேற்று நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அந்த மசோதாவினைப் பார்க்கும் பொழுது, இந்தியாவினை மதச்சார்புள்ள நாடாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது போல் உள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில், இந்த குடியுரிமை திருத்த மசோதாவின் காரணமாக, வடகிழக்கு இந்திய மாநிலங்களே பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கவலைத் தெரிவித்துள்ளார்.