தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள, இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
அதில், காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வந்த சிக்கர் தவான், ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, விளையாடாமல் இருந்து வந்த ஹர்த்திக் பாண்ட்யா, கடுமையாக முயற்சித்து, தற்பொழுது நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், அதிரடியாக விளையாடினார். இதனால், தற்பொழுது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
அதே போல், தோள்பட்டைக் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடாமல் இருந்த சிக்கர் தவான், தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரானது வலிமை அடைந்துள்ளது. சிறப்பாக பந்து வீசி வரும், புவனேஸ்வர் குமார், தாக்கூருக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
இவரும், பாண்ட்யாவும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால், இந்திய பந்துவீச்சானது, மிகவும் வலிமையடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 11ம் தேதி அன்று, தர்மசாலாவில் முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.
Shikhar Dhawan, Prithvi Shaw, Virat Kohli (C), KL Rahul, Manish Pandey, Shreyas Iyer, Rishabh Pant, Hardik Pandya, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Navdeep Saini, Kuldeep Yadav, Shubman Gill.