இந்தியா வெற்றி! தென் ஆப்பிரிக்கா போராடி தோல்வி!

19 September 2019 விளையாட்டு
viratkohlihit.jpg

இந்தியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது, டி20 போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் ஹென்ட்ரிக்ஸ் 6(11), டீ காக் 52(37), தெம்பா 49(43), வான் டெர் டூஸ்ஸன் 1(2), டேவிட் மில்லர் 18(15), ட்வெயின் 10(7), ஆண்டில் 8(5) ரன்கள் குவித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ஷைனி, ஜடேஜா, பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது.

நம் அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா 12(12), சிக்கர் தவான் 40(31), விராட் கோலி 72(52), ரிஷாப் பண்ட் 4(5) ஸ்ரேயஸ் ஐயர் 16(14) ரன்கள் எடுத்து 19 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றது.

முதல் போட்டி, மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்று, டி20 தொடரினைக் கைப்பற்றியது.

HOT NEWS