இந்திய ஏ அணிக்கு கேப்டன் அறிவிப்பு!

21 August 2019 விளையாட்டு
manishpandey.jpg

இந்திய கிரிக்கெட் ஏ அணிக்கு தற்பொழுது கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரானத் தொடரில் பங்கேற்கும், இந்திய ஏ பிரிவு அணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதில் முதல் மூன்று போட்டிகளுக்கு, மனிஷ் பாண்டே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு போட்டிகளுக்கு, ஸ்ரேயஷ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய ஏ அணி மனிஷ் பாண்டே (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வார்ட், சுப்மான் கில், அன்மோல்பிரீத் சிங், ரிக்கு புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், சிவம் டூபே, க்ரூனல் பாண்ட்யா, அக்ஷார் பட்டேல், யுஸ்வேந்திரா சாஹல், சர்துல் தாக்கூர், தீபக் சாஹர், கலீல் அஹமத் மற்றும் நிதிஷ் ரானா.

நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கான இந்திய ஏ அணி ஸ்ரேயஷ் ஐயர், சுப்மான் கில், பிரசாந்த் சோப்ரா, அன்மோல்ப்ரீத் சிங், ரிகு புய், சஜ்ஜூ சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரானா, விஜய் சங்கர், சிவம் ரூபே, வாஷிங்டண் சுந்தர், அக்சர் பட்டேல், ராகுல் சாஹர், சர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பண்டே, இஷான் போரில்.

HOT NEWS