திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்!

16 March 2020 அரசியல்
duraimurugan1.jpg

திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான துரைமுருகன், தற்பொழுது அவருடைய பொருளாளர் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து, கட்சிக் கூட்டத்தில் அறிவித்த முக ஸ்டாலின், துரைமுருகன், காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட இருப்பதால், பொருளாளர் பதவி காலியாக இருப்பதாக அறிவித்தார். மேலும், இந்தப் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள், தங்களுடைய விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

வருகின்ற 29ம் தேதி அன்று, பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கானத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS