லாரி பேருந்து மோதியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! உபியில் சோகம்!

13 February 2020 அரசியல்
yogiadityanath.jpg

உத்திரப்பிரதேச மாநிலத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்தில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து லக்னோவிற்கு செல்லும் தேசிய விரைவுச் சாலையில், நள்ளிரவு நேரத்தில், பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. அப்பொழுது, முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியினை முந்த முயற்சித்துள்ளது. இருப்பினும், லாரி மெதுவாகவே சென்றுள்ளது. ஆனால், பேருந்து ஓட்டுநர் அதிக வேகமாக வந்ததால், லாரியின் பின்புறத்தில் மோதியது.

இதனால், பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் தூக்கி வீசப்பட்டனர். நிலைமைய சுதாரிப்பதற்குள் சம்பவ இடத்தில், கோரமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்துள்ள 30க்கும் மேற்பட்டவர்கள் அருகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS