கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான எஸ்எஸ் வாஸன் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்ஐஆர்ஓ என்ற சுகாதார அமைப்பு (Commonwealth Scientific and Industrial Research Organisation) நடத்தும் மருத்துவக் குழுவில் இவர் இடம் பெற்றுள்ளார். இவருடைய குழுவானது, கொரோனா வைரஸ் குறித்து, தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் குழுவானது, தற்பொழுது இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாகவும், விரைவில் இது ஊசியில் பயன்படுத்தும் மருந்தாக வெளிவர வாய்ப்பிருப்பதாகவும், தன்னுடைய அதிகாப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எஸ்எஸ்வாசன் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.