உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், விளையாட வாய்ப்பு வழங்காததால், விரக்தியில் ஓய்வு பெறுவதாக அம்பட்டி ராயுடு அறிவித்தார். இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரிகளுக்கும் தன்னுடைய கடிதத்தினை அளித்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 29ம் தேதி, 33 வயதான ராயுடு ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடத் தயாராக உள்ளதாகவும், ஓய்வு பெறும் அறிவிப்பினைத் திரும்பப் பெறுவதாகவும் எழுதியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் ராயுடுவிடம் விளையாட வேண்டும் என கூறியதாக, ராயுடுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிஎஸ்கே, விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் நோயில் டேவிட் போன்றவர்கள் என்னை உற்சாகப்படுத்தி, ஆதரவளித்ததாகவும் அதற்காக நான் மீண்டும் விளையாட உள்ளதாகவும், அவர் தெரவித்துள்ளார்.
இவர் இப்பொழுது தான் ஓய்வினைத் திரும்பப் பெற்றுள்ளார். ஆனால், இதற்கு விதை விதைத்தவர் நம்ம அப்ரிடி தான். அவர் தான் பல முறை ஓய்வினை அறிவித்து திரும்பப் பெற்றவர். இதனை ராயுடுவும், தற்பொழுது காப்பி அடித்துவிட்டார்.