விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில், வட இந்தியாவின் பல மாநிலங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகில் உள்ள கட்லாபுரா எனும் நகரில், விநாயகர் சிலையைக் கரைப்பதற்கு சென்ற 11 பேர் நீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற மேலும், மூன்று பேரைக் காணவில்லை எனவும், அவர்களும் நீரில் மூழ்கி மரணமடைந்து இருக்கலாம் எனவும், தெரிகின்றது.
இருப்பினும், போலீசார் விடாமல் அவர்களுடைய உடலைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.