பட்டாக்கத்தி விவகாரம்! வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி!

16 January 2021 சினிமா
vijaysethupathicake.jpg

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், விஜய்சேதுபதி புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய்சேதுபதி சினிமா சூட்டிங்கின் பொழுது, கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியினை வைத்து, பிறந்தநாள் கேக்கினை வெட்டினார். அது இணையத்தில் வைரலானது. அது பலரால் பேசப்படும் அளவிற்கு, விவாதத்திற்கும் உள்ளானது. இது நேரமாக நேரமாக சர்ச்சையாகவும் மாறியது.

இதனை உணர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, தற்பொழுது புதிய அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன்படி, எனது பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

அதில் பிறந்தநாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்பொழுது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி, ஒரு பட்டாக் கத்தி முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தக் குழுவினர் உடன் பிறந்த நாள் கொண்டாடும் பொழுது, அதே பட்டாக் கத்தியினை வைத்தே கேக் வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது.

இனிமேல் இது போன்ற செயல்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்றுத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்தச் சம்பவம், யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.

HOT NEWS