எடப்பாடி பழனிசாமியினை சந்தித்த விஜய்! மாஸ்டர் வெளியாவது உறுதி?

28 December 2020 சினிமா
vijaymaster.jpg

ஆண் பெண் ஆகிய இருவரும் அழகினை விரும்புகின்றனர். உண்மையில் நம்முடைய அழகினை உறுதி செய்வதற்கு ஒரு சில விஷயங்கள் உள்ளன. அவைகளைக் கவனித்தாலே, நாம் அழகாக இருக்கின்றோமா இல்லையா என, எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

தற்பொழுது கொரோனா ஊரடங்கின் காரணமாக, திரையறங்குகளுக்கு பொதுமக்கள் செல்வது இல்லை. இதனால், திரையறங்குகளை திறக்க அனுமதித்த பிறகும் கூட, திரையறங்குகளில் சமூக இடைவெளியினைப் பின்பற்றுவது, 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக, திரையறங்குகள் பெரும் நஷ்டத்தினை சந்தித்து வருகின்றன.

இந்த சூழலில், வருகின்ற பொங்கலன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமானது, வெளியாக உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையறங்குகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு, திரையறங்க உரிமையாளர்களும் சம்மதம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், திரையறங்குகளில் உள்ள விதிகளைத் தளர்த்துவது, மற்றும் திரையறங்குகளில் 100% நபர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து பேசுவதற்காக, நடிகர் விஜய் இன்று முதல்வரை சந்தித்து உள்ளார்.

நடிகர் விஜய் முதல்வரிடம் இது குறித்துப் பேசியதாகவும், அவர் சந்திக்கும் பொழுது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக, வருகின்ற விரைவில் திரையறங்குகளில் 100% நபர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS