கேரளாவிற்கு வந்த பறவை காய்ச்சல்! கோழிக் கறி விலை குறையுமா?

05 January 2021 அரசியல்
chicken.jpg

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தினைத் தொடர்ந்து கேரளாவிற்கும் தற்பொழுது பறவைக் காய்ச்சலானது பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் பட்டை தலை வாத்துக்கள் 5ற்கும் மேலாக, ஒரே இடத்தில் மரணமடைந்து கிடந்தன. இதனைப் பரிசோதனை செய்ததில், வெளிநாட்டில் இருந்து வந்தப் பறவைகள் மூலம் இவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இவைகளில் ஹெச்5என்1 என்ற ஏவியன் இன்புளுயன்சா என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுகாதார அவசரநிலையானது, பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வாத்துக்களைப் போல கேரளாவிலும் பல ஆயிரம் வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளன. இதனை ஆய்வு செய்ததில், அங்கும் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புலா பகுதிகளில் வளர்க்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான வாத்துக்களை கொல்ல, அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. தற்பொழுது வரை, இந்தப் பறவைக் காய்ச்சலானது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, இமாச்சலப் பிரதேசத்தில் இந்த வைரஸானது கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் கறிக் கோழியின் விலையானது வெகுவாகக் குறையும் என கூறப்படுகின்றது.

HOT NEWS