இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஏழை மற்றும் தினக்கூலிகளின் வாழ்க்கையானது, மிகவும் கேள்விக்குறியான விஷயமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்காக விளையாடுகின்றோம் எனக் கூறிக் கொண்டு, பல கோடிகளை சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் உதவிகளை செய்யவில்லை.
கிரிக்கெட்டின் கடவுளாக காணப்படும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சமும், தாதா சௌரவ் கங்குலி 50 லட்சமும் வழங்கி உள்ளனர். அனைவராலும் போற்றப்படும் தல தோனி வெறும் ஒரு லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார். இதனால், பெரும் அதிருப்தியானது நிலவி வருகின்றது.
விளம்பரங்களில் மட்டுமே, பல நூறு கோடிகளை சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள், இந்தியாவே இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பொழுது, மவுனம் காப்பதும், இந்தியாவின் நிலைமை நன்றாக இருக்கும் பொழுது, அதனைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதும் வெட்கக் கேடான விஷயமாகும்.