அனைத்து போட்டிகளிலும் இருந்து அசோக் டிண்டா ஓய்வு! மீம்ஸ்களுக்கு விடை கொடுத்தார்!

03 February 2021 விளையாட்டு
ashokedinda.jpg

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா, அனைத்து விதப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ள அசோக் டிண்டா 13 ஒரு நாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் பல ஐபிஎல் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். இவருடைய பந்தினை எளிதாக பேட்ஸ்மேன்கள் அடித்தாட முடியும். இதனால், இவரைப் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர். இந்த சூழலில், தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்தார் டிண்டா.

அவர் பேசுகையில், தான் தற்பொழுது அனைத்து விதக் கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு இனி இவர் தரப்பில் இருந்து வேலை இருக்காது என, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

HOT NEWS